பாஜக, இந்து என குறிப்பிட்டு பேசிய ராகுல்; இந்துக்கள் மீதான தாக்குதல் என அமளியில் ஈடுபடும் பாஜக!

ராகுல்காந்தி பேசும்போது வாழ்க அரசியல் சாசனம் எனக் கூறி ராகுல்காந்தி உரையைத் தொடங்கினார். அப்போது பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர்.
அமித்ஷா, ராகுல்காந்தி, பிரதமர் மோடி
அமித்ஷா, ராகுல்காந்தி, பிரதமர் மோடிpt web
Published on

மக்களவையில் ராகுல்காந்தி பேசும்போது பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிட்டனர். சிவன், குருநானக், புத்தர், மகாவீர் படங்களைக் காண்பித்து மக்களவையில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது கூச்சல்கள் எழுந்தபோது, மக்களவையில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்ற கேள்வியையும் ராகுல் எழுப்பினார்.

#BREAKING | 'உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்'  - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
#BREAKING | 'உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்' - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ராகுல்காந்தி பேசும்போது வாழ்க அரசியல் சாசனம் எனக் கூறி ராகுல்காந்தி உரையைத் தொடங்கினார். அப்போது பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். ராகுல்காந்தி பேசும்போது, “இந்திய அரசியல் சாசனத்தை காத்துள்ளோம். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளன. என் வீட்டையும் பறித்துக் கொண்டனர். தொடர் தாக்குதலில் இருந்து அரசமைப்பைக் காத்து வருகின்றோம்

அமித்ஷா, ராகுல்காந்தி, பிரதமர் மோடி
உலகக்கோப்பையை வென்ற மும்மூர்த்திகள்... பல கோடி இந்தியர்களின் கனவை நிஜமாக்கிய சூப்பர்ஹீரோக்கள்!

பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார். நாம் எல்லோரும் பயாலாஜிக்கல். நாம் பிறப்போம். மரணிப்போம். ஆனால், பிரதமர் அப்படிப்பட்டவர் அல்லவே. அவர் நான்-பயாலாஜிக்கல் (Non-Biological). இவ்வளவு சொல்லும் மோடி, காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். திரைப்படத்தின் வழி காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார் மோடி. பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?” என கூறினார்.

#BREAKING | ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா
#BREAKING | ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா

மேலும் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் உரைக்கு எதிர்ப்பு தெரிவிர்த்து பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

‘பாஜகவினர் வன்முறை இந்துக்கள்; உண்மையான இந்துக்கள் அல்ல’ என ராகுல் பேசியதற்கு மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ராகுலின் பேச்சு இந்து சமூகம் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார்” என்றும் கண்டனம் தெரிவித்தார். ராகுல்காந்தியோ, ‘மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல’ என்றார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமளி தொடர்ந்துகொண்டே வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com