கவுரி லங்கேஷ் கொலையில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை: விசாரணைக் குழு!

கவுரி லங்கேஷ் கொலையில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை: விசாரணைக் குழு!
கவுரி லங்கேஷ் கொலையில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை: விசாரணைக் குழு!
Published on

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பில்லை என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது.

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 2017-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். வீட்டு வாசலில் வைத்து மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். 

இந்நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா வுக்கு தொடர்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியாகின. இதை, சிறப்பு விசாரணை குழு மறுத்துள்ளது.

’‘கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையில் சாத்விக்கு தொடர்பு இல்லை. குற்றப்பத்திரிகையிலும் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com