9 கோடி தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளனர் - டிராய்

9 கோடி தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளனர் - டிராய்

9 கோடி தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளனர் - டிராய்
Published on

தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் 9 கோடி பேர் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் புதிய விதிமுறைகளுக்கு மாறியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் ‌40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. புதிய மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 154 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய அறிவிப்பின்படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது.

அதேநேரம், இந்தக் குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. எச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம். இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பாத சேனல்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்ல. அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உண்டாகும்.

இதுகுறித்து டிராயின் தலைவர் ஷர்மா “மொத்தமாக உள்ள 17 கோடி கேபிள் டிவி வாடிக்கையாளார்களில் இதுவரை 9 கோடி பேர் டிராயின் புதிய விதிமுறைகளுக்கு மாறியிருப்பதாக”  தெரிவித்துள்ளார். இதில், கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் ஆறரை கோடி பேரும், டிடிஹெச் வாடிக்கையாளர்கள் இரண்டரை கோடி பேர்களும் இதுவரை புதிய விதிமுறைகளில் பதிவு செய்தி்ருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com