என்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை? மனைவியிடம் விசாரணை!

என்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை? மனைவியிடம் விசாரணை!
என்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை? மனைவியிடம் விசாரணை!
Published on

என்.டி.திவாரி மகன் ரோகித் திவாரி, கொலை செய்யப்பட்டதாக உடற்கூராய்வு தகவல் வெளியானதை அடுத்து, அவர் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரி. இவர் மகன் ரோகித் சேகர் திவாரி (40) டெல்லியில் வசித்து வந்தார். இவர், கடந்த 12 ஆம் தேதி உத்தரகாண்டுக்குச் சென்ற அவர், 15 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ரோகித்தின் அம்மா உஜ்வாலா திவாரி க்கு கடந்த 16 ஆம் தேதி, போன் அழைப்பு வந்தது. அதில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ரோகித் மயங்கி கிடக்கிறார் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் ரோகித்தை சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

உஜ்வாலா திவாரிக்கு போன் வந்த போது, ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் சித்தார்த் மற்றும் வேலைக்காரர் வீட்டில் இருந்துள்ளனர். 

இதையடுத்து அவர் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் மூச்சுத்திணறி அவர் இறந்திருப்பதும் தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் இதை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவர் தலையணையால் அழுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. 

இதையடுத்து ரோகித் சேகர் திவாரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அங்கு ஏழு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு வேலை செய்யவில்லை. ரோகித் சேகர் திவாரியின் மனைவி டெல்லியில் நேற்று இல்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவர் வந்ததும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து என்.டி.திவாரிதான் தனது தந்தை என்று நிரூபித்தவர் ரோகித் சேகர். ஹரியானா மாநில முன் னாள் அமைச்சரின் மகளான உஜ்வாலா தங்கியிருந்த வீட்டில், திவாரி குடியேறியபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் விளைவாக ரோகித் பிறந்தார். இது 35 வருடத்துக்கு முன் நடந்தது. 

இதை முதலில் மறுத்து வந்தார் திவாரி. ஆனால் மரபணு சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரோகித் தனது மகன் தான் என்று ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, 34 ஆண்டுகளுக்கு பிறகு உஜ்வாலாவை, ரோகித் சேகர் முன்னிலையில் என்.டி.திவாரி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com