இங்கே பொங்கல், அங்கே லோஹ்ரி: ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள்

இங்கே பொங்கல், அங்கே லோஹ்ரி: ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள்
இங்கே பொங்கல், அங்கே லோஹ்ரி: ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள்
Published on

தமிழகத்தைப் போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறுவடைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், பிற மாநிலங்களில் வேறுவகையான பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா அமிர்தசரஸ், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் லோஹ்ரி என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. நெருப்பு மூட்டி அதைச் சுற்றி ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடினர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லோஹ்ரி பண்டிகையை எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உற்சாகமாக கொண்டாடினர். மேற்குவங்க மாநிலத்தில், அறுவடைத் திருநாளை மகர சக்ரந்தி பெயரில் மக்கள் கொண்டாடினர். இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று புனித நீராடுவதற்காக நேற்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை கரையில் திரண்டனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com