பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்..!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்..!
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்..!
Published on

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால் நகரில் பெண்ணை பாலியல் வன்முறை செய்த சம்பவத்தில் 4 குற்றவாளிகளை காவல்துறையினர் சாலையில் நடத்தி அழைத்துவரும் போது அவர்களை பெண்கள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

போபாலில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி இந்திய குடிமை பணித்தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது இளம் பெண்ணை அவரது நண்பர் கடத்திச்சென்று கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை காவல்துறையினர் சாலையில் நடக்க வைத்து அழைத்துச்சென்றனர்.

அப்போது, கூடிய இளம் பெண்ணின் உறவினர்கள், தோழிகள் 4 பேரையும் காலணி மற்றும் கம்பால் அடித்தனர். கூட்டத்திலிருந்த பெண் காவலரும் கைது செய்யப்பட்டவரை தாக்கினார். ஒருகட்டத்தில், கம்பு, காலணிகளை கைது செய்யப்பட்ட நபர்களிடமே கொடுத்த பெண்கள், அவர்களையே அடித்துக்கொள்ளவும் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com