பீகார்|பள்ளி பேருந்தை தீ வைக்க முயன்ற போராட்டக் கும்பல்; தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்!

பீகாரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்தை சூறையாடி, போராட்டக்காரர்கள் தீவைக்க முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பீகார்
பீகார்Facebook
Published on

பீகாரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்தை சூறையாடி, போராட்டக்காரர்கள் தீவைக்க முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் 21 அமைப்புகள் இணைந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி பாரத் பந்த் நடைபெறும் என அறிவித்திருந்தன.

தமிழ்நாட்டில் இதன் தாக்கம் இல்லாவிட்டாலும், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பீகாரில், சாலைமறியல் போராட்டங்களால் பாட்னா, Hajipur, Darbhanga, Jehanabad, Begusarai மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியது.

பீகார்
காலை தலைப்புச் செய்திகள்|கட்சிக்கொடியை அறிமுகம் செய்யும் விஜய்- போராட்டத்தில் பங்கேற்ற கங்குலி!

கோபால்கஞ்ச் பகுதியில், குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்தை வழிமறித்த போராட்டக்காரர்கள், பேருந்தை சூறையாடினர். தொடர்ந்து, அந்த பேருந்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க முயன்றதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, நிலைமையை சுதாரித்துக்கொண்டு பேருந்தை ஓட்டுநர் அங்கிருந்து எடுத்துச்சென்றதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com