ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுக்கு காரணம்: எய்ம்ஸ் இயக்குனர்

ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுக்கு காரணம்: எய்ம்ஸ் இயக்குனர்
ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுக்கு காரணம்: எய்ம்ஸ் இயக்குனர்
Published on

ஸ்டீராய்டுகளின் தவறான பயன்பாடு காரணமாக ‘கருப்பு பூஞ்சை’ தொற்று அதிகரிப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

'கருப்பு பூஞ்சை' என்றும் அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது சில நேரங்களில் கோவிட் -19 விட அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புதான் பூஞ்சை தொற்றுக்கு முக்கிய காரணம் என்பதால், ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்தார்.

நீரிழிவு நோயாளிகள் அல்லது கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஸ்டெராய்டுகளை தவறாக எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மியூகோமைகோசிஸ் தொற்றுநோயைத் தடுக்க, ஸ்டெராய்டுகளின் தவறான பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.

மியூகோமிகோசிஸ் பூஞ்சை வித்துகள் மண், காற்று மற்றும் உணவில் கூட காணப்படுகின்றன. எனவே மியூகோமிகோசிஸ் பூஞ்சை வெட்டு காயங்கள், துடைத்தல், எரித்தல் அல்லது பிற வகையான தோல் அதிர்ச்சி மூலம் உடலுக்குள் நுழைவதால் தொற்று நெறிமுறைகள் குறித்து கூடுதல் கவனமாக இருக்குமாறு மத்திய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக சமீபத்திய காலங்களில் மட்டுமே ஏராளமான  ‘கருப்பு பூஞ்சை’ பாதிப்புகள் பதிவாகின்றன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. டெக்ஸாமெதாசோன் போன்ற ஸ்டெராய்டுகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தை முடக்குவதால், அதன் பயன்பாடு குறித்து கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com