'இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது' - அமைச்சர் ராஜ்நாத் சிங்

'இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது' - அமைச்சர் ராஜ்நாத் சிங்
'இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது' - அமைச்சர் ராஜ்நாத் சிங்
Published on

இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது என்று, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை மறைமுகமாக குறிப்பிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீரத்தை உலகமே பாராட்டியதாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் யாரும் தப்பிக்க முடியாது என்றும், யாரையும் விட்டுவைக்க மாட்டோம் எனவும் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com