அக்கப்போரா இருக்கே: அசைவம் இல்லாததால் நின்றது திருமணம்

அக்கப்போரா இருக்கே: அசைவம் இல்லாததால் நின்றது திருமணம்
அக்கப்போரா இருக்கே: அசைவம் இல்லாததால் நின்றது திருமணம்
Published on

அசைவ உணவு இடம்பெறாததால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, சட்ட விரோதமாக நடத்தப்படும் இறைச்சி கூடங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் இறைச்சி விலை உயர்ந்துள்ளது. அங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. இதில், சைவ உணவு வழங்கப்பட்டது. இதை பார்த்த மணமகன், அசைவ உணவு இல்லையென்றால் திருமணம் செய்ய மாட்டேன் என்றார். இறைச்சி கிடைக்காத நிலையை மணமகள் வீட்டார் கூறியும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. மணமகன் சமாதானம் அடையாததால் கடுப்பான மணமகள், அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டார். பின்னர் அங்கு வந்திருந்த உறவினர் திடீர் மாப்பிள்ளையாக, அவரை திருமணம் செய்துகொண்டார் அந்தப் பெண். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com