“இதுவரை எந்தப் பிரதமரும் இப்படி பேசியதில்லை” - மோடியை சாடிய மன்மோகன் சிங்!

“இதுவரை எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்த பேச்சைப் பேசவில்லை. வெறுப்புப் பேச்சைப் பேசிய முதல் பிரதமர் மோடிதான்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மோடி, மன்மோகன் சிங்
மோடி, மன்மோகன் சிங்எக்ஸ்
Published on

ஜனநாயகத் தேர்தல் பெருவிழாவின் கடைசிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில்தான் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

அதுபோல் பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால், கட்சித் தலைவர்கள் கடைசிகட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “பிரதமர் பதவிக்குரிய மாண்பைச் சீர்குலைத்துவிட்டார் மோடி. பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்புப் பேச்சைப் பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்குமுன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்புப் பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை. பொதுப் பரப்புரையில் கண்ணியமான பேச்சுகளைப் பேசாத முதல் பிரதமர் மோடிஜி” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “என் நண்பனை சுட்டுக்கொன்னுட்டீங்களா?” - ரஷ்ய ராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்துசென்ற உயிர் நண்பர்!

மோடி, மன்மோகன் சிங்
“இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்” - பிரதமர் மோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com