மகனை விற்று ஃபோன் வாங்கிய குடிகார அப்பா!

மகனை விற்று ஃபோன் வாங்கிய குடிகார அப்பா!
மகனை விற்று ஃபோன் வாங்கிய குடிகார அப்பா!
Published on

11 மாத மகனை விற்று ஃபோன் வாங்கிய குடிகார அப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம் முகி. இவர் மனைவி சுகுதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது. பலராம் குடிபழக்கம் உடையவர். நிரந்தர வேலையும் கிடையாது. 

இந்நிலையில் அரசு டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற சோம்நாத் சேத்தி என்பவரின் 24 வயது மகன், சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டான். மகன் இறந்த துக்கத்தில் அவர் மனைவி மன அழுத்தத்தில் இருப்பதால், மனைவியை காப்பாற்ற, பலராம் மகனை தத்தெடுப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டாராம் பலராம். 

பின்னர், தனது 11 மாத மகனை 23 ஆயிரம் ரூபாய்க்கு அவருக்கு விற்றிருக்கிறார். இதற்கு பலராமின் உறவினர் பாலையாவும் உடந்தை. கிடைத்த பணத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு ஃபோன் ஒன்றை வாங்கிய பலராம், மகளுக்கு 1,500 ரூபாய்க்கு வெள்ளிக் கொழுசு ஒன்றை வாங்கினார். பாக்கி பணத்தை வைத்து குடல் முட்டக் குடித்து மட்டையாகிவிட்டார். 

இந்த விஷயம் சுகுதிக்கு தெரியவர, போலீஸ் வரை சென்றது விவகாரம். போலீசார் பலராமை கைது செய்து, குழந்தையை மீட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com