மணமுடித்த முதல்நாள் இரவே துடிக்கதுடிக்க மனைவியை கொன்ற கணவன்; ரத்த வெள்ளத்தில் முடிந்த காதல்திருமணம்!

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருமணமான சில மணி நேரங்களிலேயே மனைவியயிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள் கோப்பு படம்
Published on

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதான நவீன். இவர் அப்பகுதியில் துணிக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த லிகிதா என்னும் 19 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். லிகிதாவும் நவீனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததையடுத்து லிகிதா பள்ளி படிப்பை முடித்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை தங்கள் வீட்டாரிடம் கூறவே அவர்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் இரு விட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்கோப்பு படம்

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலை நவீனுக்கும் லிகிதாவிற்கும் சம்பாரசபாஹள்ளி -யில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. பின்னர் லிகிதாவின் வீட்டிற்குச் சென்ற புதுமண தம்பதிகள் சிறிது நேரம் உறவினர்களுடன் பேசி விட்டு பின் தங்கள் அறைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் லிகிதா அலறும் சத்தம் கேட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று புரியாத உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே ஜன்னல் வழியே என்ன நடக்கிறது என்று பார்த்தபோது அங்கு லிகிதாவை நவீன் கத்தியால் குத்திக் கொண்டிருக்கும் காட்சியை கண்டுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லிகிதா ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்துள்ளார். அவரின் அருகிலேயே நவீனும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் வரத் தாமதமாகவே ஆட்டோவில் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் லக்கிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் நவீனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணமான மூன்று மணி நேரங்களிலேயே தனது மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சிக்கு நவீன் முயன்றதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத சத்தம் மட்டுமே குடும்பத்தினருக்கு கேட்டுள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நவீன் கண் எழுத்தால் மட்டுமே இதற்கான காரணம் தெரியும் என்று இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி நவீனும் உயிரிழந்தார்.

திருமணமான மூன்று மணி நேரத்திற்குள் மனைவியை கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com