“பாஜக துன்புறுத்துகிறது” -  5 மாடி கட்டடத்தில் இருந்து குதிக்க முயற்சித்த ஹைதராபாத் நபர்

“பாஜக துன்புறுத்துகிறது” -  5 மாடி கட்டடத்தில் இருந்து குதிக்க முயற்சித்த ஹைதராபாத் நபர்
“பாஜக துன்புறுத்துகிறது” -  5 மாடி கட்டடத்தில் இருந்து குதிக்க முயற்சித்த ஹைதராபாத் நபர்
Published on

ஹைதராபாத் சதர்காட் பகுதியில் ஒருவர், பாஜகவினர் பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள் எனக்கூறி கட்டிடத்தின் மேல் ஏறி குதித்துவிடுவதாக மிரட்டியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்மூர் மண்டலத்தைச் சேர்ந்த இவர், உள்ளூர் பாஜக நிர்வாகிகள் சில காரணங்களுக்காக பொதுமக்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எடுத்து வருவதால், அவர் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க காவல்துறை உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

திடீரென அந்த நபர் ஒரு ஐந்து மாடி கட்டிடத்தின் மீது ஏறி, குதித்து விடுவதாக மிரட்டியதால் பெரிய அளவில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தகவலின் பேரில், மிர்சவுக் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, அவரை கீழே இறங்க வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com