”மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - சூரத்தில் பாஜக வெற்றி குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் விளாசல்!

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 543 தொகுதிகளின் ஓட்டு எண்ணப்படுவதற்கு முன்னதாக பாஜக 1 இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பத்திரிக்கையாளர் ப்ரியன்
பத்திரிக்கையாளர் ப்ரியன்புதிய தலைமுறை
Published on

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 543 தொகுதிகளின் ஓட்டு எண்ணப்படுவதற்கு முன்னதாக பாஜக 1 இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரிய சொல்லும் விளக்கம்:

“குஜராத் மாநிலம் சூரதில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளராக வந்த காங்கிரஸ் வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. அப்பகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களும் தாங்களாகவே போட்டியிடுவதை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இது குறித்து தேர்தல் வாரியம் கூறும்பொழுது, எல்லோரும் போட்டியிடாமல் தாமாகவே முன்வந்து வாபஸ் பெற்றுக்கொண்டால் நாங்கள் என்ன செய்யமுடியும்? என்கிறார்கள். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் விவரங்கள் தெரிந்த செய்திதான்” என்கிறார். இவர் இதுகுறித்து கூறும் விளக்கம் என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com