ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடிFile image

🔴LIVE: தேர்தல் முடிவுகள் 2024 | பெரும்பான்மை பெற்ற NDA; Tough Fight கொடுத்த I.N.D.I.A! முழு விவரம்

18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதுதொடர்பான முழு விவரங்களையும், லைவ் அப்டேட்களாக, இங்கே பெறலாம்....

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்றது.

இந்நிலையில், இத்தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) சில நிமிடங்களுக்கு முன்னர் [காலை 8 மணி அளவில்] தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 மையங்களில் வாக்குகள் எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
மக்களவை தேர்தல் | காங்கிரஸ் vs பாஜக மக்களவை தேர்தலில் கடந்து வந்த பாதை!
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை...!

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஊடகங்கள் மத்தியில் நேற்று தெரிவிக்கையில், “முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் கடைசிச் சுற்று எண்ணிக்கைக்கு முன்பாக தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆங்காங்கே நீடிக்கும் சில குழப்பங்கள்...

  • நெல்லையில் அம்பை பகுதி வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்துபோய் இருக்கிறது. இதனால் பூட்டு உடைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது.

  • வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை எனக்கூறி கட்சியினர் சிலர் கோபப்பட்டதில், அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

  • தென் சென்னை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணி சற்று தாமதமானது

எங்கே யார் முன்னிலை? தற்போதைய நிலவரம்...

8.40 மணியளவில் - மொத்தமாக பாஜக 213 இடங்களிலும், காங்கிரஸ் 129 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதில் குறிப்பாக,

  • வயநாடு தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் ராகுல் காந்தி முன்னிலையில் இருக்கிறார். கேரளாவில் மொத்தமாக காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், இடதுசாரிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றனர்.

  • தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் இருக்கிறார்.

  • மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் இருக்கிறார்.

  • திருச்சி தொகுதியில் துரை வைகோ முன்னிலையில் இருக்கிறார்.

  • உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி முன்னிலையில் இருக்கிறார்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
வாரணாசி| பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடி நடிகர்.. யார் இந்த ஷியாம் ரங்கீலா?

ரேவண்ணா முன்னிலை - அண்ணாமலை பின்னடைவு!

காலை 9 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் பின்னடவை சந்தித்திருக்கிறார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும் பின்னடவை சந்தித்துள்ளார்.

அண்ணாமலை பின்னடைவு
அண்ணாமலை பின்னடைவு

மற்றபடி ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், மத்திய சென்னை, சேலம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும் திமுகவே முன்னிலை வகிக்கிறது.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடிமுகநூல்

கர்நாடக மாநிலத்தில் பாஜக - JDS கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹசன் தொகுதியில் களம் கண்டுள்ள பிரஜ்வல், தான் களம் கண்ட தொகுதியில் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பாலியல் சர்ச்சைக்குள்ளாகி, தலைமறைவாகி பின் நாடு திரும்பிய இவர் மீது மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு உற்று கவனிக்கப்படுகிறது.

மற்றபடி உத்தரப்பிரதேசத்தில் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 262 இடங்களிலும், காங்கிரஸ் 176 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
கர்நாடகா மாநிலம் | மக்களவை தேர்தல் களம் எப்படி உள்ளது?

மோடி பின்னடைவு!

உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய், மோடியை விடவும் 6,000 க்கும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அஜய்ராய் 11,480 வாக்குகளும் மோடி 5,257 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ராகுல் முன்னிலை!

இன்னொருபுறம், ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார்.

விஜய பிரபாகரன் முன்னிலை!

தமிழகத்தில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.

அமேட்டி தொகுதியில் ஸ்மிரிதி ரானி பின்னடைவு

உ.பி: அமேட்டி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி ரானி பின்னடைவு

காங்கிரஸ் வேட்பாஅர் கிஷோரி லால் 3000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காங். கூட்டணி முன்னிலை

மக்களவை தேர்தல் முடிவுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை!

விருதுநகரில் நாமக்கல், கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். இதேபோல அதிமுக கூட்டணியில் விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

அண்ணாமலை கடும் பின்னடைவு! (10 மணியளவில்)

திருநெல்வேலியில் காங்கிரஸ் 20,459 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக 17,000 வாக்குகள் அளவில் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.

தென்காசியில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். 2வது இடத்தில் அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் உள்ளது. 3 வது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், 4ம் இடத்தில் பாஜக-வும் உள்ளது.

தருமபுரியில் பாஜக கூட்டணியிலுள்ள பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்துவருகிறார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 35,104 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 23,101 வாக்குகளும் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதிமுக அங்கு 15,313 வாக்குகள் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

100 + தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை! 

I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு மேல் தனித்து முன்னிலையில் இருக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக கூட்டணி 289 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களிலும், பிற கட்சிகள் 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா உட்பட 7 மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி பாஜக-வுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதும் கவனிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாகவும் 220 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஒடிசா, ஆந்திரா - சட்டமன்ற தேர்தல் நிலவரம்!

இதற்கிடையே ஒடிசா மற்றும் ஆந்திரா சட்டமன்ற தேர்தலும் நடந்து வருகிறது. அதன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை விவரங்கள் என்ன?

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 40 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் பாஜக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
‘நாயகன்’ இந்த வாரம் | ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!

ஆந்திராவில் YSR காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 120 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால் இரு மாநிலங்களிலுமே ஆளுங்கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. அதிலும் ஆந்திராவில் ஆளுங்கட்சி படுதோல்வியை எதிர்கொள்ளும் சூழலில் உள்ளது.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ஆந்திரா ஸ்டார் வேட்பாளார்கள் யார் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி?

கேராளாவில் மாஸ் காட்டிய காங்கிரஸ் - பாஜகவில் சுரேஷ் கோபி முன்னிலை

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான UDF 18 இடங்களிலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான LDF ஒரு இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றனர்.

நடிகரும் பாஜக நட்சத்திர வேட்பாளருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்

பெரம்பலூர், சிதம்பரம் - திமுக, விசிக முன்னிலை!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை காட்டிலும் 38,683 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு 58973 முன்னிலையில் உள்ளார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தின் முன்பாக வெடிவெடித்து திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்

இதேபோல சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் விசிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்

டெல்லியில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்திருந்த நிலையில், தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மீண்டும் அமைகிறது பாஜக?

I.N.D.I.A. கூட்டணியால் பாஜகவின் வெற்றி விகிதம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், பாஜக-வே வெற்றிபெறும் சூழலில் உள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதாவது, 240 தொகுதிகளில் முழுமையாக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் பாஜக அரசு. இதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. பெரும்பான்மைக்கு, 272 தொகுதிகள் தேவை. பாஜக, தன் கூட்டணி கட்சிகளோடு சேர்த்து பார்க்கையில் இந்த இடங்களை கடந்துவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, 96 இடங்களில் முன்னிலை பெற்று, இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக மாறுகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக கூட்டணி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 226 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. மிக சொற்ப வித்தியாசமே இரு கூட்டணிகளுக்கும் இருப்பதால், பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளது I.N.D.I.A. கூட்டணி.

சந்திரபாபு நாயுடுவை அழைக்கும் சரத்பவார்?

ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுடன் சரத்பவார் பேசியிருக்கிறார். சரத்பவார், I.N.D.I.A. கூட்டணியின் முக்கியத் தலைவராக இருக்கிறார் என்பதும், சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும்!

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், தருமபுரி தொகுதியில் மட்டும் பாஜக சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். மற்ற 39 இடங்களிலும் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தருமபுரியில் சௌமியா தற்போது சுமார் 7,000 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளிலும், திமுக முன்னிலையில் உள்ளது!

தருமபுரியில் பாமக தோல்வி, ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி!

தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, தோல்வியடைந்துள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட சௌமியா, கடும் போட்டி கொடுத்து வந்தார். இருந்தபோதிலும் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்திருக்கிறார். 18,524 வாக்கு வித்தியாசத்தில் சௌமியா திமுக வேட்பாளரை விட தோல்வி அடைந்திருக்கிறார்.

இதேபோல ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தோல்வியடைந்துள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றியடைந்திருக்கிறார்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
மதுரை: “நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல” – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

ஆட்சி அமைக்க முனைகிறதா காங்கிரஸ்?

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. I.N.D.I.A. கூட்டணி 230 க்கும் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில்,

ஆட்சி அமைக்க இன்னும் நாற்பத்து சொச்சம் இடங்களே அக்கட்சிக்கு தேவைப்படுகிறது. அதை சாத்தியப்படுத்த, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - பாட்னாவில் நிதிஷ் குமார் - ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆகியோருடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

ராகுல் செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது. அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தை காக்க உதவியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. பாஜக மட்டுமன்றி சிபிஐ, அமலாக்கத்துறையையும் எதிர்த்து வென்றுள்ளோம்.

டெல்லியில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் நாளை சந்திக்கிறோம். எங்களது வியுகத்தை தற்போது கூறிவிட்டால், மோடி உஷாராகிவிடுவார். பாஜக கூட்டணியில் உள்ள ஐஜத, தெலுங்கு தேசம் கட்சிகளை I.N.D.I.A கூட்டணிக்கு அழைப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்” என்றார்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
பாஜகவின் அஸ்திரத்தை தவிடுபொடியாக்கிய மக்கள் ! அயோத்தியில் பாஜக தொடர்ந்து பின்னடைவு...

தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை!

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, பாஜக 240 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், லோக் ஜனசக்தி 5, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2, மற்றவை 10 என என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க முனைந்துள்ளது பாஜக.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக!

I.N.D.I.A. கூட்டணி

I.N.D.I.A. கூட்டணியை பொறுத்தவரை மொத்தம் 234 தொகுதிகளில்வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திமுக 22 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும் வாகைசூடியுள்ளன. அதேபோல், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, ஆம் ஆத்மி 3, ஐயூஎம்எல் 3 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்!

இரு கூட்டணி கட்சிகளுமே, இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியமைப்பது குறித்தும்; I.N.D.I.A. கூட்டணி அதை தங்களால் வீழ்த்த முடியுமா / வாய்ப்புள்ளதா என்பதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என தெரிகிறது!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com