முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பயணம்: ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் உற்சாகம்!

முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பயணம்: ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் உற்சாகம்!
முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பயணம்: ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் உற்சாகம்!
Published on

ஹைதரபாத்தில் அறிமுகமாகியுள்ள மெட்ரோ ரயிலில் முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி  மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார். அதன் பின்பு நேற்று மியாப்பூரில் இருந்து நாகோல் வரையிலான மெட்ரோ சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பிற்பகல் வரையில் 45 ஆயிரம் டோக்கன்கள் மற்றும் 10 ஆயிரம் ஸ்மார்ட்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதில் பயணம் செய்த பொதுமக்கள் பலர், நிறை குறைகளை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் விரைவில் செய்து தரப்படும் என்றும் என்.வி.எஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த மெட்ரோ ரயிலில் ரூ.10 முதல் ரூ.60 மதிப்பிலான கட்டண சேவை நிர்ணியிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com