போபையா-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ்

போபையா-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ்
போபையா-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ்
Published on

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கே.ஜி. போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் வேண்டும் என்பதால், சட்டப்பேரவை செயலாளர் மூர்த்தி இரண்டு நபர்களை தாற்காலிக சபாநாயகராக பரிந்துரை செய்தார். இதனால் மூர்த்தி பரிந்துரை செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே அல்லது பாஜகவை சேர்ந்த உமேஷ் கர்தி ஆகியோரில் ஒருவரை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா நியமிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமனம் செய்தார்.

இவர் மூன்று முறை பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இவர் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு சபாநாயகராக இருந்த போது, ஒருதலைபட்சமாக செயல்பட்டு எடியூரப்பா ஆட்சியமைக்க உதவியாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுதொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே போபையாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இதனால் போபையா தற்போது தாற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு, காங்கிரஸ் மற்றும் மஜத கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அத்துடன் அவரது நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றே தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com