போபையாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

போபையாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை
போபையாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை
Published on

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கே.ஜி. போபையாவுக்கு எதிரான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா ஆட்சிக்கு எதிராக நாளை மாலை நம்பிக்கை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். அத்துடன் சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு கூட்டவேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அப்போது, எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் போபையா தாற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, காங்கிரஸ் தரப்பில் பதிவாளருடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com