ஜாதகத்தை நம்பி காதலனை கொன்ற காதலி! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

ஜாதகத்தை நம்பி காதலனை கொன்ற காதலி! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
ஜாதகத்தை நம்பி காதலனை கொன்ற காதலி! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
Published on

களியக்காவிளை அருகே ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்து காதலனை படுகொலை செய்ததாக காதலி வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எல்லையோர கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், கல்லூரி இறுதியாண்டு மாணவரான இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு தோழி அளித்த குளிர்பானம் தான் காரணம் என ஷாரோன் ராஜின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷாரோன் காதலியின் குடும்பத்தினர் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் முதல் கணவன் உயிரிழப்பார் இரண்டாவது கணவருடன் மட்டும் தான் வாழ முடியும் என ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் கூறியுள்ளார்.

இதை நம்பி தன்னுடைய குடும்பத்துடன் பக்காவாக பிளான் செய்த காதலி கிரீஷ்மா ஷாரோனிடம், தான் வீட்டை விட்டு ஓடிவருவதாகக் கூறி நம்ப வைத்து அவளின் கழுத்தில் தாலியையும் கட்ட வைத்துள்ளார். பின்பு வீட்டிற்கு அழைத்து வந்து முதலில் கஷாயம் ஒன்றை கொடுத்து விட்டு குளிர்பானம் ஒன்றையும் கொடுத்துள்ளார். காதலியை நம்பிய ஷாரோன் இரண்டையும் குடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காதலி கொடுத்த விஷத்தால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் யாரையும் சந்தேகிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தாரிடையே விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து காதலி உட்பட அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . காதலி தனது காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com