கேரளா | திடீரென அறுந்து விழுந்த மிடில் பர்த்.. கழுத்து எலும்பு உடைந்து பயணி பரிதாப மரணம்!

மலப்புரம்: ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில் , கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்தார்.
இறந்தவர்
இறந்தவர்கூகுள்
Published on

மலப்புரம்: ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் (62). இவர் தனது மனைவி, மகன்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மரத்திகா அலிகான் வேலை விஷயமாக கடந்தவாரம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்துள்ளார். இவருக்கு கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பயணத்தில் இவர் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் படுத்து தூங்கி வந்துள்ளார்.

இரவு, ரயிலானது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடக்கும்பொழுது, எதிர்பாராதவிதமாக, மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் விழுந்து இருக்கிறது. இதில் இவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே அவரது கை கால்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர் அலிகானை வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கழுத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் போக்குவரஹ்தில் இதுபோல் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பயணத்தின் போது செயல்படாத மின்விசிறி, தண்ணீர் தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிவறைகள் போன்றவை பயணியர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

இப்படிபட்ட ஒரு ரயிலில் பயணம் செய்த அலிகானுக்கு ஏற்பட்ட சம்பவம், ரயில் பர்த்தில் படுத்து உறங்கும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதையே எடுத்துரைக்கிறது. ஆகவே, பயணிகளின் வசதிகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே துறை ஆவண செய்ய வேண்டும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com