நடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

நடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

நடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு
Published on

நடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததன. இதுகுறித்து கேளரா போலீசாரும் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, கலாபவன் மணி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று அவரது சகோதரரும், மனைவி நிம்மியும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com