கர்நாடக பாஜக தலைவர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

கர்நாடக பாஜக தலைவர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!
கர்நாடக பாஜக தலைவர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!
Published on

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கர்நாடகா பாஜக தலைவர்கள் இன்று காலை சந்தித்து பேசினார்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், ஆட்சி அமைப்பதற்கான முயற்சி யில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்று அ‌ங்கு மூத்த தலைவர்‌களிடம் எடியூரப்பா ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்து கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். மேலிட உத்தரவு ‌வந்தவுடன் சட்டப் பேரவை‌ உறுப்பினர்கள் கூட்டத்தை கூ‌ட்டி தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று‌ம் ‌பின்னர் ஆளுநரிடம் சென்று ஆ‌ட்சி யமைக்க உரிமை கோரப்படும் என்றும் எடியூரப்பா‌ தெரிவித்திருந்தார். 

(ஜெகதீஷ் ஷெட்டர்)

இந்நிலையில், கர்நாடகாவின் மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவாலி உள்ளிட் டோர் டெல்லி சென்றனர். பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை இவர்கள் இன்று காலை சந்தித்து பேசினர்.

பின்னர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறும்போது, ’’கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பது குறித்து அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோ ரை சந்தித்து பேசினோம். மீண்டும் இதுபற்றி விவாதிப்போம் என்று கூறினார்கள். அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருக்கிறது. அதற்கு பின் அவர்கள் இறுதி முடிவெடுப்பார்கள்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com