கர்நாடகா: டிராக்டர் ஏறி உயிரிழந்த கர்ப்பிணி பாம்பு: 50 குட்டிகள் உயிருடன் மீட்பு

கர்நாடகா: டிராக்டர் ஏறி உயிரிழந்த கர்ப்பிணி பாம்பு: 50 குட்டிகள் உயிருடன் மீட்பு
கர்நாடகா: டிராக்டர் ஏறி உயிரிழந்த கர்ப்பிணி பாம்பு: 50 குட்டிகள் உயிருடன் மீட்பு
Published on

சித்ரதுர்காவில் டிராக்டர் ஏறி பாம்பு உயிரிழந்த நிலையில், அதன் 50 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே உள்ள ஹம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேசப்பா. விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை டிராக்டரால் உழுது கொண்டிருந்தார்.

அப்போது டிராக்டர் சக்கரத்தில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதைகண்டு மல்லேசப்பா டிராக்டரில் இருந்து இறங்கி பார்த்துள்ளார். அப்போது கட்டுவிரியன் பாம்பின் வயிற்றுப் பகுதியிலும் சக்கரம் ஏரியதால் அது உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து உயிரிழந்த பாம்பின் வயிற்றில் இருந்த 50 பாம்பு குட்டிகள் உயிருடன் வெளியே வந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு மல்லேசப்பா தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், 50 பாம்பு குட்டிகளையும் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com