நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி கர்ணன்?

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி கர்ணன்?
நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி கர்ணன்?
Published on

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கர்ணனின் சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக, கர்ணனின் சட்ட ஆலோசகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா காவல்துறை கர்ணனை வலைவீசித் தேடி வந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்ற செய்தி காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவர் சென்னையில் தான் உள்ளார் என்று செய்திகள் பரவியிருந்த நிலையில் இப்படி ஒரு தகவல் உலாவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com