வெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை 

வெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை 
வெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை 
Published on

மும்பையில் வெளிநாட்டு வேலை கிடைக்கவில்லை என்பதால் விரக்தியடைந்த ஐடி பொறியாளர் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த 42 வயதான வெங்கடேஷ் ஐயர் தனது 75 வயது தாய் மீனாட்சியுடன் மும்பை மிரா சாலை பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இவர்கள் இந்த இடத்தில் வசித்து வந்தனர். வெங்கடேஷ் ஐயர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் பார்த்துவந்த வேலை பறிப்போனது. இதனையடுத்து அவரால் வீட்டிற்கு வாடகை அளிக்கமுடியவில்லை. எனினும் தனக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க போவதாக கூறி வீட்டின் உரிமையாளரிடம் சிறிது கால அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கடேஷ் மற்றும் அவரது தாய் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டனர். இந்தத் தற்கொலை குறித்து ஒரு கடிதத்தில் வெங்கடேஷ் எழுதியுள்ளார். அதில், “எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” எனக் கூறியுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விசாரணையில் வெங்கடேஷ் தனக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கவில்லை என்பதால் விரக்தியில் இருந்தது தெரியவந்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com