இந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு?

இந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு?
இந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு?
Published on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள  பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில், போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியாக தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த சண்டையில், இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 7 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்ததாக கூறப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர் - இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com