கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் கருவி: ஐசிஎம்ஆர் அனுமதி

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் கருவி: ஐசிஎம்ஆர் அனுமதி
கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் கருவி: ஐசிஎம்ஆர் அனுமதி
Published on

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா இருப்பதை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பரிசோதனையை எல்லாரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், தொற்று அறிகுறிகள் உள்ளோரும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரும் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.

இக்கருவி மூலம் ஒருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஆனால் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனையை மேற்கொள்ள வசதியாக மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com