என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவி வயது 13..!

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவி வயது 13..!
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவி வயது 13..!
Published on

ஹைதராபாத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஒருவரான சென்னகேசவலுவின் மனைவி 13 வயதே நிரம்பியவர் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது 4 பேரையும் என்கவுன்ட்டர் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 28 வயதான சென்னகேசவலுவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. இவரது மனைவி கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்ததும் தெரிய வந்திருக்கின்றது.

பெற்றோரை இழந்த அந்தப் பெண், மாமனார் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தினர், ஒருவாரத்துக்குள் அந்தப் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னகேசவலுவின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com