பெங்களூரு | கழிவறையில் இருந்த ஸ்மார்ட்போன்; 2 மணி நேரமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ! சிக்கியது எப்படி?

பெங்களூரின் பிரபல காபி நிறுவனத்தின் பணிப்புரிந்துவரும், ஊழியர் ஒருவர், பெண்களின் கழிவறையில் வைக்கப்பட்டுள்ள கழிவறை குப்பைத்தொட்டியில் ஸ்மார்போட்டை மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்டு வேவ்
தேர்டு வேவ் முகநூல்
Published on

பெங்களூருவின் பிரபல காபி நிறுவனத்தின் பணிப்புரிந்துவரும், ஊழியர் ஒருவர், பெண்களின் கழிவறையில் வைக்கப்பட்டுள்ள கழிவறை குப்பைத்தொட்டியில் ஸ்மார்போட்டை மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி நிறுவனத்திற்கும் தொழில்துறைகளுக்கும் பிரலமானதாக கருதப்படும் பெங்களூரில் ஏராளமான பெண்கள், ஆண்கள் பணிக்காக தங்கி பணியாற்றி வருவது வழக்கம்.

ஆகவே, இவர்கள் நண்பர்களோடு அடிக்கடி செல்லும் இடங்களில் ஒன்றாக கருதப்படுவது காபி ஷாப். இந்தவகையில், 'தேர்டு வேவ்' என்ற காபி ஷாப் ஒன்றின் கழிவறையில், செல்போனை குப்பைத்தொட்டியில் மறைத்து வீடியோ பதிவு செய்த நபர் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று காலை, BEL ரோடு பகுதியில் உள்ள தேர்டு வேவ் காஃபி ஷாப் ஒன்றின் கழிவறைக்கு சென்ற பெண் ஒருவருக்கு, கழிவறையில் இருந்த குப்பைத்தொட்டியில் ஏதோ கேமராவின் பகுதி உள்ளது போன்று தெரிந்துள்ளது.

சந்தேகமடைந்த அப்பெண், சோதனை செய்து பார்த்ததில், ஸ்மார்ட்போன் ஒன்று, சத்தம் வரக்கூடாது என்பதற்காக ஹேர்பிளைன் மோடில் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

மேலும், அதில் வீடியோ ஆன் செய்யப்பட்ட நிலையில், டாய்லட் ஷீட்டை படம் பிடிக்கும் வகையில் குப்பைத்தொட்டியில் வைக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார். இந்த கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக காபி ஷாப்பின் உரிமையாளரிடத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அதனை சோதனை செய்தபோது, கிட்டதட்ட 2 மணி நேரமாக ஸ்மார்ட்போனின் வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செல்போனுக்கு சொந்தமான நபர் பணி நீக்கம் செய்யப்பட்ட சூழலில், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இது குறித்து காவலர்கள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பாக, காபி ஷாப் தெரிவிக்கையில்,

“ பெங்களூருவில் உள்ள எங்களின் பெல் ரோடு கடையில் நடந்த இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது போன்ற சம்பவங்களுக்கு கடுமையாக எங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கிறோம்.

இதில் தொடர்புடைய நபரை நாங்கள் உடனடியாக கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

தேர்டு வேவ்
கொல்கத்தா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் கொலை! வெடித்தது போராட்டம்!

இந்நிலையில், இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்து, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com