ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன டால்கம் பவுடர் மாதிரிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

பிரபல நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர், ஷாம்பூ, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனிடையே, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை சிறுவயது முதலே பயன்படுத்தியதால், தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் 63 வயதான பெண் ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத் தொகையாக 417 மில்லியன் டாலர்கள் வழங்க உத்தரவிட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 2600 கோடி ரூபாய் ஆகும். இதனையடுத்து ஜான்சன் பவுடர் குறித்து இந்திய மக்களிடமும் அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன டால்கம் பவுடர் மாதிரிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் டால்கம் பவுடரால் புற்றுநோய் ஏற்படுகிறதா என்ற விவகாரம்  குறித்து விசாரணை செய்யும் படியும், அந்த நிறுவனத்தின்  பவுடர், தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு  இருக்கிறதா என்பதை அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும்படியும் மத்திய சுகாதார மற்றும் குலம்பநல அமைச்சகம் அதன் மண்டல அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com