மீண்டும் அடுத்த அதிர்ச்சி! - சிறுமி சுடப்பட்டு எரித்து கொலை, பாலியல் வன்கொடுமையா?

மீண்டும் அடுத்த அதிர்ச்சி! - சிறுமி சுடப்பட்டு எரித்து கொலை, பாலியல் வன்கொடுமையா?
மீண்டும் அடுத்த அதிர்ச்சி! - சிறுமி சுடப்பட்டு எரித்து கொலை, பாலியல் வன்கொடுமையா?
Published on

பீகாரில் சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தற்போது அதேபோன்ற சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் இன்று அதிகாலை ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. 

இந்தச் சடலம் மீட்கபட்டது தொடர்பாக பக்சர் மாவட்ட எஸ்.பி. உபேந்திரநாத் வர்மா, “16 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் ஈடாட்தி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் 2 துப்பாக்கி குண்டுகளின் பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் இச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

எனினும் பிரேத பரிசோதனையின் முடிவு வந்தவுடன் தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்படும். இந்தச் சிறுமி யார் என்பது குறித்து அறிய முயற்சி எடுத்து வருகிறோம். இந்தச் சிறுமி சடலம் கண்டெடுப்பு தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இளம் பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com