ஆந்திரா: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
ஆந்திரா: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Published on

ஆந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் ஆதித்யா பார்ச்சூன் டவர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள பிளாட் எண் 505 இல் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பெரிய அளவிலான புகை மற்றும் தீப்பிழம்புகள் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த நான்கு பேரும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.

விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த பங்காருநாயுடு பஹ்ரைனில் குடும்பத்தினருடன் குடியேறினார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பங்காருநாயுடு (50), அவரது மனைவி நிர்மலா (44), மகன் தீபக் (21), காஷ்யப் (19) ஆகியோருடன் விசாகப்பட்டினத்திற்கு வந்தார்.

இந்நிலையில் அவரது குடியிருப்பிலேயே தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com