ஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் !

ஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் !
ஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் !
Published on

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபுரம் ரயில் நிலையம் தண்டவாளத்தில் 4 சடலங்கள் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு இன்று தகவல் வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் ஒரு கிலோ மீட்டரில் ஒரு ஆண் சடலம் காணப்பட்டது.

இன்னும் ஒரு கிலோமீட்டர் வரை சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் சடலம் காணப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து சென்ற போலீசார் சோதனை செய்தபோது மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு சடலங்கள் காணப்பட்டது. மொத்தம் ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளியிலும் இரண்டு ஆண் சடலங்கள், இரண்டு பெண் சடலங்கள் காணப்பட்டது. 

சடலங்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹிந்து புறம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது தனித்தனி குடும்பத்தை சேர்ந்தவர்களா என்றும் மற்றும் இந்த நான்கு பேரும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது கொலை செய்து அவர்களின் சடலங்களை தண்டவாளத்தின் மீது வீசிவிட்டு சென்று விட்டார்களா என பல கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com