சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை!!

சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை!!
சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை!!
Published on

சிறுநீரை குடிக்கச்சொல்லி வற்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்

மத்தியப்பிரதேசத்தில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. போபாலில் இருந்து 300கிமீ தொலைவில் உள்ளது சஜோர் கிராமம். அந்த கிராமத்தில் வசித்து வரும் 19 வயது இளைஞரான விகாஸ் சர்மா, அங்கு உள்ள தண்ணீர் குழாயில் ஒரு குவளை நீர் பிடித்துள்ளார். அப்போது அருகில் கிடந்த சில பாத்திரங்கள் மீது தெறித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பாத்திரத்தின் உரிமையாளர்கள் 3 பேர் (2 பெண்கள் உட்பட) விகாஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். விகாஸின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். மேலும் விகாஸ் கொண்டு வந்த குவளையில் சிறுநீரை நிரப்பி அதனை குடிக்கச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த விகாஸ் வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கடிதம் ஒன்றையும், விகாஸ் இறப்பு குறித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். அதன்படி 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com