மகளுடன் ஓம் பிர்லா
மகளுடன் ஓம் பிர்லாஎக்ஸ் தளம்

'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

மக்களவை சபாநாயகரின் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பேசுபொருளாகி வருகிறது.
Published on

பேசுபொருளான ஓம் பிர்லாவின் இளைய மகள்

18வது நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களவை சபாநாயகராக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஓம் பிரலாவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மக்களவை சபாநாயகரான பதவியேற்றுள்ள ஓம் பிர்லா கடந்த நாட்களாகப் பேசுபொருளாக மாறியுள்ளார். அதற்குக் காரணம், அவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுதான். தொடர்ந்து அகாடமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா, தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார். தனது வெற்றி குறித்து அஞ்சலி பிர்லா PTIக்கு அளித்துள்ள பேட்டியில், ”தந்தை ஓம் பிர்லாவின் பொதுச் சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது. மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்துவரும் சேவையைப்போல தானும் இந்தச் சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பேசுபொருளாகி வருகிறது. அவர், தேர்வு எழுதாமலேயே வெற்றிபெற்றிருப்பதாகவும் அவருடைய தந்தையின் செல்வாக்கை வைத்தே தேர்வில் வெற்றிபெற்றதாகவும், தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்த அவர் எப்படி படித்திருப்பார் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

மகளுடன் ஓம் பிர்லா
மீண்டும் சபாநாயகராக ஓம் பிர்லா.. 2வது இன்னிங்ஸில் இருக்கும் சவால்கள்.. கடந்த கால செயல்பாடுகள் என்ன?

ஐஏஎஸ்ஸில் 3 நிலைகளைத் தாண்ட வேண்டும்

இந்தியாவில் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர்பதவிகளை பெற வேண்டும் என்றால், மத்திய தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 3 நிலைகளைத் தாண்டித்தான் தேர்ச்சியடைய முடியும்.

அதாவது, யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர்

முதலில் முதல்நிலை தேர்விலும்,

இரண்டாவதாக முதன்மை தேர்வுகளிலும் தேர்ச்சியடைய வேண்டும்.

அதன்பிறகு நேர்க்காணலிலும் (இண்டர்வியூ) அவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும்.

இந்த 3 படிநிலைகளை தாண்டினால் தான் இறுதியாக பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரால் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் அமர முடியும். இப்படி கடினமான தேர்வில், ஒருசிலர்தான் முதல் முயற்சியிலேயே வெற்றிபெறுகிறார்கள். ஆனால், பலர் 2, 3, 4வது முயற்சிகளில்தான் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் பலரோ, தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEET-உடன் UPSC தேர்வையும் ஊழலோடு ஒப்பிட்ட வலைதளங்கள்!

இதை மையப்படுத்தித்தான் அஞ்சலி பிர்லாவின் தேர்ச்சி குறித்தும் கேள்வி எழுந்தது. ஏற்கெனவே நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனவும், UPSC-யும் நீட் வழியில் செல்கிறதா எனவும், நீட் தேர்வை நடத்தும் ஏஜென்சிபோல் UPSCயும் ஊழல் செய்ததா சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

மறுப்பு தெரிவித்த அஞ்சலி பிர்லா

எனினும், இந்தக் குற்றச்சாட்டை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். அவர், ”யூபிஎஸ்சி தேர்வு மிகவும் நியாயமாக நடத்தப்படக்கூடியது. இதில் பின்வாசல் வழியாக தேர்ச்சிபெற முடியாது. மேலும், நான் முறையான நெறிமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் இந்த தேர்வில் வெற்றிபெற்றேன்” எனத் தெரிவித்துள்ள அவர், அனுமதி அட்டையின் நகலைக் காட்டியுள்ளார்.

அதன்படி சில ஆங்கில ஊடகங்கள், 2019ஆம் ஆண்டுக்கான தகுதிப் பட்டியல்களில் அவருடைய ரோல் எண்ணைச் சரிபார்த்ததுடன், அவர் உண்மையில் முதன்மைத் தேர்வுகளில் கலந்துகொண்டார் என செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் எழுத்துத் தேர்வில் 1750க்கு 777 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். நேர்காணல் சுற்றில் 275க்கு 176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண்கள் 953. சிவில் சர்வீசஸ் தேர்வு16(4)&(5)இன்படி, UPSC ஒவ்வொரு ஆண்டும் இடஒதுக்கீடு பட்டியலை வெளியிடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி, 2019இல் UPSC பரிந்துரைத்த 89 பேரில் அஞ்சலி பிர்லாவும் பட்டியலிடப்பட்டார் என்பது உறுதியாகிறது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: கர்நாடகா| 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்.. பெற்றோர்கள் எதிர்ப்பு!

மகளுடன் ஓம் பிர்லா
பயிற்சி வகுப்புக்கே செல்லாமல் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி - இளம்வயது ஐஏஎஸ் ஆன உ.பி பெண்!

யார் இந்த அஞ்சலி பிர்லா?

ராஜஸ்தானைச் சேர்ந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமிதா பிர்லாவின் இளைய மகள்தான் இந்த அஞ்சலி பிர்லா. இவருடைய மூத்த சகோதரி அகன்ஷா பிர்லா. கோட்டாவில் உள்ள சோபியா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அஞ்சலி பிர்லா, பின்னர் டெல்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) படித்தார்.

இதையடுத்துத்தான் முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சியிலும் வெற்றிபெற்றார். தற்போது ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தந்தையும் சகோதரியும் ஊக்கமளித்துள்ளதாக அஞ்சலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நீட் முறைகேடு விவகாரம்... முடங்கிய மக்களவை.. காங்கிரஸ் உறுப்பினர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மகளுடன் ஓம் பிர்லா
2 ஆவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com