ரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டிகளில் வெடிப்பொருட்கள் மீட்பு

ரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டிகளில் வெடிப்பொருட்கள் மீட்பு
ரயில் பாலத்தின் அடியில் 5 பெட்டிகளில் வெடிப்பொருட்கள் மீட்பு
Published on

கேரள ரயில்வே பாலத்தின் அடியில் 5 இரும்புப் பெட்டிகளில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குட்டிப்புரம் ரயில்வே பாலத்தின் அடியில் இருந்து 5 இரும்புப் பெட்டிகளில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பாலத்தின் அருகில் ஆற்றங்கரையில் நடந்து சென்ற போது வெடிப்பொருட்கள் இருந்த பெட்டியைப் பார்த்து தகவல் கொடுத்ததையடுத்து, அப்பெட்டிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

வெடிப்பொருட்களை ஆய்வு செய்து செயலிழக்கச் செய்ய சென்னையில் உள்ள தேசிய பாதுகாப்பு காவலர்களை கேரள காவல்துறை அழைத்துள்ளது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com