“நான் எடுத்த சில முடிவுகளால் மன அழுத்தத்தை உணர்ந்தேன்” - நடிகை தீபிகா படுகோன்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனக்கு குழந்தை பிறந்த பிறகு மன அழுத்ததையும், தூக்கமின்மையையும் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு LIVE LOVE LAUGH FOUNDATION நடத்திய விரிவுரை தொடரின் போது பேசிய நடிகை தீபிகா படுகோன், பிரசவத்துக்குப் பின் தூக்கமின்றி தான் எடுத்த சில முடிவுகள் தன்னை பாதித்ததாகவும், குறிப்பிட்ட நாட்கள் தான் தூங்காததால் மன அழுத்தமாகவும், எரிச்சலாகவும் உணர்ந்ததாக தெரிவித்தார்.

வலி, கோபம் போன்ற அதீத உணர்ச்சிகள் சிலவற்றை உணர்வதும் அதிலிருந்து கற்றுக்கொள்வதும் இயல்பானதுதான் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதி ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com