ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இணைநோய்கள் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com