சிகரெட் பிடிப்பதில் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்!

சிகரெட் பிடிப்பதில் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்!
சிகரெட் பிடிப்பதில் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்!
Published on

டெல்லியில் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயதேயான மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வடமேற்கு டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ரோகினியின் செக்டார் 1ல் வசிக்கும் 17 வயது நிரம்பிய சிறுவன் செக்டார் 2ல் உள்ள வீட்டின் அருகே சிகரெட் பிடித்துள்ளான். அந்த வீட்டில் இருந்த 17 வது நிரம்பிய மற்றோரு சிறுவன் இங்கெல்லாம் சிகரெட் புகைக்க கூடாது என கூறியுள்ளான். வேறு எங்காவது செல் என்று அந்த சிறுவன் கூறியதாக கூறப்படுகிறது. தான் இங்குதான் சிகரெட் பிடிப்பேன் என்று பதிலுக்கு அந்த சிறுவன் கூற இரண்டு பேருக்கும் வாக்குவாதம் துவங்கியுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டிற்கு உரிமையாளரான அந்த சிறுவன் சிகரெட் பிடித்த சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். இறந்த சிறுவனின் உடலை ஒரு பையில் போட்டு சாலையோரத்தில் தூக்கி வீசியுள்ளான் அந்த சிறுவன். தொண்டையில் வெட்டு காயங்களுடன் அடையாளம் தெரியாத உடல் ஒரு பையில் அடைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு சிறுவர்கள் இடையேயான சிகரெட் மோதல் கொலையில் முடிந்த கதை தெரியவந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது அந்த சிறுவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com