காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா திடீர் விலகல்!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா திடீர் விலகல்!
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா திடீர் விலகல்!
Published on

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்த இவர், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், கடந்த 10 வருடத் துக்கு முன் காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். இதுவரை பல்வேறு பொறுப்பு களை ஏற்ற நான், அதை நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடன் சரியாகவே செய்திருக்கிறேன்.

இந்த பொறுப்பு காரணமாக, பல மிரட்டல்களையும் பாதுகாப்பின் மையையும் என் குழந்தைகள் உட்பட நானும் என் குடும்பத்தினரும் சந்தித் திருக்கிறோம். இதற்காக கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வில்லை. கடந்த சில வாரங்களாக கட்சியில் எனது சேவை மதிக்கப் படவில்லை என நினைக்கிறேன். 

கட்சித் தலைவர்கள் சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள், கட்சியில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக் கிறது. இதற்கு பிறகும் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள் கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com