இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கேரளாவில் இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மாறாக கோட்டயம் 6, பத்தனம்திட்டாவில் ஒருவர் என ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37லிருந்து 30 ஆகக் குறைந்துள்ளது.
மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூரில் 18 பேர் உட்பட காசர்கோடு, வயநாடு, கொல்லம், இடுக்கி, பாலக்காடு ஆறு மாவட்டங்களில் மட்டுமே கொரோன பாதிப்புகள் உள்ளது. மீதமுள்ள கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா திருவனந்தபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.