மணிப்பூரில் மீண்டும் தாக்குதல்: மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் பலி – காங்கிரஸ் கட்சி கண்டனம்!

மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள மான்பங்க் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
Manipur riot
Manipur riotpt desk
Published on

மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள மான்பங்க் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்த வீரர் பீகாரை சேர்ந்த அஜய் குமா ஜா என தெரியவந்துள்ளது.

manipur
manipurfile

இந்த தாக்குதலில் மணிப்பூர் காவல்துறையை சேர்ந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மான்பங்க் கிராமப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான வாகனம் ஒன்றும் பயங்கரவாதிகள் தாக்குதலில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

Manipur riot
திருப்பூர் | 50-க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கு: பெண் கைது!

சிஆர்.பி.எஃப் வீரர் கொல்லப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குக்கி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி எதையும் கண்டு கொள்ளாமல் தனக்கான உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com