பாலம் இடிந்து விழுந்தது: 6 பேர் படுகாயம்!

பாலம் இடிந்து விழுந்தது: 6 பேர் படுகாயம்!
பாலம் இடிந்து விழுந்தது: 6 பேர் படுகாயம்!
Published on

இமாச்சலப் பிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது சம்பா நகரம். இந்த நகரையும் பஞ்சாய் மாநிலம் பதன்கோட்டையும் இணைக்கும் ஆற்றுப்பாலம் ஒன்று இருக்கிறது. 15 வருடம் பழமையான இந்தப் பாலத்தில் வழக்கம் போல நேற்றும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது திடீரென்று பாலம் இடிந்து விழுந்ததில் அதில் சென்றுகொண்டிந்த கார், மினி லாரி, ஒரு பைக் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன. இதில் கார் மற்றும் மினி லாரியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துபற்றி விசாரணை நடந்துவருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com