மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றார் ஓம் பிர்லா !

மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றார் ஓம் பிர்லா !
மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றார் ஓம் பிர்லா !
Published on

மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. அப்போது இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் பதவியேற்றார்.   அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

இந்நிலையில் 17ஆவது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வானார்.  மேலும்  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து  சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அமர வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com