திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதி

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா? pt desk
Published on

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு ஆய்வில் உறுதி...

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார்.

இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?
திருப்பதி லட்டு | குற்றச்சாட்டு வைத்த சந்திரபாபு.. மறுப்பு தெரிவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்!

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி, "சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோயிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோயில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது.

எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா?" எனப் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து திருப்பதி லட்டானது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில் லட்டில் மீன் எண்ணெய் சோயா பீன்ஸ் சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளுடன் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது உறுதியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com