வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பெங்களூரு: சிக்கி தவிக்கும் மக்கள்

வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பெங்களூரு: சிக்கி தவிக்கும் மக்கள்
வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பெங்களூரு: சிக்கி தவிக்கும் மக்கள்
Published on

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள கோரமங்கலா, எஜிபுரா, ஜெயாநகர், ஜேபி நகர், பென்னர்கெட்டா, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், அப்பகுதியில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் வேரோடு சாயந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகள், வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கிய சாலைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவை நீரால் சூழப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்யும் கனமழையால்  மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் வீடுகளுக்குள் வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com