"ஈரத்துணியால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்" - விஷவாயு பாதித்த பகுதிகளுக்கு அறிவுரை

"ஈரத்துணியால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்" - விஷவாயு பாதித்த பகுதிகளுக்கு அறிவுரை
"ஈரத்துணியால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்"  - விஷவாயு பாதித்த பகுதிகளுக்கு அறிவுரை
Published on

விஷ வாயு கசிந்துள்ள பகுதியில் வாழும் மக்கள் ஈரத்துணியால் முகத்தை மறைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்‌ வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு ‌இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ‌வாயுவால் கிராமத்தினருக்குக் கண்கள் எரிச்சல் மற்றும்‌ மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இந்தப் பாதிப்புகளால் இதுவரை 11 பேர் ‌உயிரிழந்துள்ளனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்து‌ ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனு‌ப்பினர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணிக‌ளில் ஈடு‌பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டர் சுற்ற‌ளவில் வசிப்போரை மீட்‌டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயு கசிவைக் கண்டறிந்து சீரமைக்கும் பணிகளைத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் மக்கள் ஈரத்துணியால் முகத்தை மறைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும், நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும், கண் எரிச்சல் ஏற்பட்டால் கண்களை நன்றாகத் தண்ணீரால் கழுவ வேண்டும், தோலில் அரிப்பு ஏற்பட்டால் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும், உடல்நிலையில் வேறு மாற்றம் ஏற்பட்டு அசெளகரியமாக உணர்ந்தால் உடனடியாக 108-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com