கார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு

கார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு
கார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு
Published on

தெலங்கானாவில் பதிவு எண்ணுக்கு பதிலாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை வைத்து காரை ஓட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஐதராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருக்கும் இடத்தில் ஏ.பி. சி.எம் ஜெகன் என ஆங்கிலத்தில் எழுத்துக்களால் எழுதப்பட்ட நம்பர் பிளேட் இருந்துள்ளது. அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஹரி ராகேஷ் என்று தெரியவந்தது. 

சுங்கச் சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் காவல்துறை சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர முதலமைச்சர் பெயரை பயன்படுத்தியதாக ஹரி ராகேஷ் தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com