“NDA வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி” - பிரதமர் மோடி பேச்சு

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதிலுரை வழங்கினார்.
pm modi
pm modipt web
Published on

பிரதமர் மோடி வழங்கிய பதிலுரையில், “தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி மக்கள் 3 ஆவது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக நமது அரசு தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது.

அரசமைப்பு நிறுவப்பட்டதன் 75-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் 75-ஆவது ஆண்டுக்குள் இருப்பது திருவிழா போன்றது. எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம்போல் உதவும்.

மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றியால் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு செல்லும். எங்களுக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் உரையின்போது எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com